காங்டோக்: மக்களவை தேர்தலுடன் சிக்கிமில் 32 பேரவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அங்கு தற்போது பிரேம் சிங் தமான்(56) தலைமையிலான எஸ்கேஎம் பாஜவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது.
தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக எஸ்கேஎம் கட்சியும் பாஜவும் தனித்து போட்டியிடுகின்றன. கடந்த 2019 தேர்தலில் பிரேம் சிங் தமான் போக்லோக் – கம்ராங் தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில் வரவுள்ள பேரவை தேர்தலில் சோரெங் – சகுங் மற்றும் ரெனாக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.