இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தீஸ்தா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.