ஆஸ்டின்: அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஹுஸ்டனுக்கு வடக்கே சுமார் 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளீவ்லேண்ட் நகரின் ஒரு வீட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் வசித்து வந்தனர். அங்கு சென்ற மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் குழந்தைகளும், பெண்களும் அலறினர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுவன், 2 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 39 வயதான சந்தேக நபரை தேடி வருகின்றனர்.
previous post