சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவின் போது ஓரமாக நிற்கக் கூறியதில் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவ பக்தரான கார்வண்ணனை அடித்து தாக்கியதாக புகாரில், 2 தீட்சிதர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயிலின் கனகசபை மீது ஏறிய பக்தரை தாக்கியது, கோயிலுக்குள் சக தீட்சிதரை தாக்கியது என தீட்சிதர்கள் மேல் பல வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.