டெல்லி: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம் என்று சாக்க்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை ஒன்றிய அரசு உணரவில்லை என்று சாக்க்ஷி தெரிவித்திருக்கிறார்.