மும்பை: பாலியல் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டலை மகாராஷ்டிரா குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரு மாடல் அழகிகள் சிக்கினர். மகாராஷ்டிரா மாநில குற்றப்பிரிவு பிரிவு போலீசாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கோரகான் பகுதியில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு ெசன்ற போலீசார், குறிப்பிட்ட இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு மாடல் அழகிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலிவுட் நடிகையும், காஸ்டிங் இயக்குநருமான ஆர்த்தி மிட்டல் என்பவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டால் ரூ.2,000 முதல் 15 ஆயிரம் வரை தருவதாக கூறியதால், இந்த தொழிலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சுதார் தலைமையிலான குழுவினர் நடிகை ஆர்த்தி மிட்டலை பாலியல் மோசடி வழக்கில் கைது செய்தனர். மேலும் கோரேகானில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு மாடல் அழகிகளையும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் மோசடி வழக்கில் ஆர்த்தி மிட்டல் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.