சென்னை: தேனி மற்றும் திருச்சி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்தார். அதன்படி தேனியில் டிடிவி.தினகரனும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர்.
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: அமமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமமுக வேட்பாளர்களாக தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி.தினகரன், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர்.