சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அமலாக்கத்துறை தனியாக மனு அளித்துள்ளது.