சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி நிஷா பானுவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டதை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.