சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை பதிலளித்துள்ளது. ED வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு அளித்தது. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.