மும்பை : வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்வுடன் 74,086 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முதல்முறையாக 22,490 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் உயரத் தொடங்கின. 355 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் பிற்பகலில் 474 புள்ளிகள் உயர்ந்து 74,151 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது.