டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக தொடர்வார் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியை திரும்பப்பெறுகிறார். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்துசெய்து இன்று அறிவிப்பு வெளியானது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்பை கடந்தவாரம் உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.