அரசு சார்பில் முதியோருக்கான செயலியை திருச்சியில் கடந்த 28ம் தேதி செப்டம்பர் உலக முதியோர் தினத்தின் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதியோர்களுக்கான சேவைகள் அத்தனைக்கும் ஒரே இடமாக ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. முத்தக் குடிமக்கள் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் விவரம். மருத்துவமனை மற்றும் முதியோர் இல்லங்கள், அரசு அலுவலகங்களை கூகுள் மேப் மூலம் வழிகாட்டுதல், உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளுதல், சட்ட வழிமுறைகள், மனநல ஆலோசனைகள் பெற உதவி, குறைதீர்க்கும் வழிமுறைகள்,அவசர உதவி தொடர்பு, மருந்துகள் உட்கொள்ள நினைவுபடுத்துதல் போன்ற பல சிறப்பு அமசங்கள் உள்ளடங்கியதாக இருக்கும் இந்தச் செயலிக்கு ‘சீனியர் சிட்டிஸன் ஆப்’ (Senior Citizen App ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. செயலியை இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர்தளத்தில் பெறலாம்.