டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டது. ஜாமீன் கோரிய வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. அமலாக்கத்துறை வேண்டுமென்றே விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.