Saturday, June 1, 2024
Home » செல்வ வளம் பெருக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்

செல்வ வளம் பெருக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்

by Kalaivani Saravanan

பின்வரும் மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்.

`சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்’

செல்வ வளம் பெருக ஸ்ரீலட்சுமி மந்திரம்

மனித வாழ்க்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது. நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கிக்கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது. நல்ல உழைப்பிருந்தும் செல்வம் சேரவில்லை என்பவர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும். அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகூர்த்தம் என்பார்கள். மந்திர ஜபம் செய்ய இதுவே உகந்த காலம்.

மந்திரம்

‘ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’

பூஜை முறை

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் குளித்து தூய ஆடை அணிந்து, மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு முகமாக அமர வேண்டும். அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, வடக்கு முகமாக மகாலட்சுமி படத்தை பொட்டிட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டு பால் அல்லது பால் பாயசம் படைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, ஏலக்காய், தேங்காய், பழம், ஊதுவத்தி ஆகியவற்றை ஒரு பித்தளை தட்டில் வைத்து தீபாராதனை செய்து பூஜையை தொடங்க வேண்டும். இந்த பூஜைக்கு குத்து விளக்கே உகந்தது, பசு நெய்யில் மட்டுமே விளக் கேற்ற வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை தினமும் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். அல்லது ஒரு மண்டலம் 48 நாட்கள் ஜபம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் லட்சுமி படம் வைக்க தேவையில்லை, அகல் விளக்கேற்றி மந்திர ஜபம் மட்டும் செய்தல் போதுமானது.

தொகுப்பு: குடந்தை நடேசன்

You may also like

Leave a Comment

twenty − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi