சென்னை: சுயநலவாதிகள் தூண்டுதலில் போராட்டம் செய்து மெரினா சாலையில் போக்குவரத்து முடக்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களிடம் அறிவுறுத்தும்படி வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் எதிர்ப்புக்கு இடையே 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பு தெரிவித்தது. மாநகராட்சியின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.