சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 31க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்களை விற்க, பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவை போக்குவரத்து துறை ரத்து செய்து வருகின்றது.