ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் நிறுத்தும் இடத்திலிருந்து காரில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பதிவெண் கொண்ட ஆடி காரை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் கஞ்சா தவிர வேறு ஏதேனும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.