மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. வடகால் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி சாலையில் சமைத்து மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக சீர்காழி – திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.