Thursday, May 9, 2024
Home » சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலக்ஷ்மி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்!

சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலக்ஷ்மி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்!

by Suresh

சென்னை: சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலக்ஷ்மி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலக்ஷ்மி ஏப்.2-ம் தேதி நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலக்ஷ்மி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கடந்த 2011ம் ஆண்டு அளிக்கப்பட்ட 2012ம் ஆண்டு திரும்ப பெற்றுக்கொள்வதாக விஜயலக்ஷ்மி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், வழக்கின் விசாரணையின் அடிப்படையிலும் வழக்கை முடித்துவைத்த வைத்த நிலையில், தற்போது மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புகார் தாரரான நடிகை விஜயலக்ஷ்மியை ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஜயலக்ஷ்மி ஆஜராகவில்லை. அதற்கு மாறாக காவல்துறை தரப்பில் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களுருவில் வசித்து வரும் நடிகை விஜயலக்ஷ்மிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் என் இந்த மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, நடிகை விஜயலக்ஷ்மி நீதிமன்றத்தில் ஆஜராக மேலும் வழங்கலாம் எனக்கூறி விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அண்டைய தினம் அவர் நேரில் ஆஜராக முடியாவிட்டாலும் காணொளி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் எனவும் நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi