* ரஞ்சி டிராபியில் அதிவேக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை அசாம் அணி கேப்டன் ஆல் ரவுண்டர் ரியான் பராக் பெற்றுள்ளார். ராய்பூரில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக அவர் 2வது இன்னிங்சில் 155 ரன் (87 பந்து, 11 பவுண்டரி, 12 சிக்சர்) விளாசி மிரட்டினார். அவர் நேற்று 56 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார். முன்னதாக, ரிஷப் பன்ட் 2016 ரஞ்சி சீசனில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 48 பந்தில் சதம் அடித்ததே ரஞ்சியில் அதிவேக சதமாக முதலிடத்தில் உள்ளது.
* ஆப்கானிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள டி20 போட்டித் தொடருக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படவில்லையா அல்லது அதிரடியாக நீக்கப்பட்டாரா? என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
* டிசம்பர் 2023 ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா மற்றும் ஜிம்பாப்வேயின் பிரீசியஸ் மராங்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.