பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத்துக்கு சிறுநீரகம் தானம் செய்த அவரது மகள் ரோகினிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த அறுவை சிகிச்சையில் லாலுவிற்கு அவரது மகள் ரோகினி சிறுநீரக தானம் செய்தார். மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கடந்த 3ம் தேதி நடந்த கூட்டத்தில் ரோகினியை லாலு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் ரோகினி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுதி செய்துள்ளது. சரன் மக்களவை தொகுதியில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக ரோகினி களமிறங்குகிறார். இந்த தொகுதியில் லாலு பிரசார் எம்பியாக இருந்துள்ளார். இவரது மூத்த சகோதரியான மிசாபாரதி இரண்டாவது முறையாக பாடலிபுத்ரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்