திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளத்தை ஒட்டி ஐஎன்எஸ் கருட் என்ற கடற்படை விமான நிலையம் உள்ளது.இங்கு கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று மதியம் 2 மணியளவில் தேஜஸ் என்ற ஹெலிகாப்டர் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் பிளேடுகள் அங்கு ஓடு பாதையில் நின்று கொண்டிருந்த யோகீந்தர் என்ற கடற்படை வீரரின் மேல் பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.