ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி சீமான் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை அக்.10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமான் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு தொண்டையில் தொற்று பாதிப்பு உள்ளதால் ஆஜராகவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி முருகேசன் ஒத்திவைத்தார்.