ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம், தலமலை, ஆசனூர், கடம்பூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.