ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மருமகனின் தங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மருமகனை கொல்ல முயன்றபோது அவரது தங்கை பலியானார். வேன் ஏற்றிக் கொல்ல முயன்றபோது மருமகன் சுபாஷின் தங்கை ஹாசினி பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கில் கைதான மாமனார் சந்திரன், மாமியார் சித்ரா, உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.