சென்னை : தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.