ஸ்ரீவில்லிபுத்தூர் : காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த ஜூலை 15ம் தேதி சதுரகிரி மலையில் காட்டுத்தீ பரவியதால் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.