மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணையை நடத்தி முடிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்பது பற்றி சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 5 மாதம் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு முக்கிய சாட்சி உட்பட எங்கள் தரப்பில் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என சிபிஐ பதில் அளித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கேள்வி
previous post