திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சசிகலா அணியில் செயல்பட்டு வந்த ஒன்றிய கவுன்சிலர்கள் நரசிம்மன், கார்த்திகேயன் ஆகியோர் ஆர்.கே.பேட்டை மாவட்ட கவுன்சிலர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் பாண்டுரங்கன் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைத்தனர். இவர்களை பி.வி.ரமணா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை கைத்தறி பிரிவு துணை செயலாளர் ஜோதி, நிர்வாகிகள் லோகநாதன், சிவாஜி, ஏகாம்பரம், சீனிவாசன், ஐயப்பன், தணிகைமலை, கோலேரி தாமு ஆகியோர் பங்கேற்றனர்.