சென்னை : சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.முன்னதாக சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.