சென்னை: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுக்கும் ஆளுநருக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது செயலுக்கு உரிய காரணம் எதையும் ஆளுநர் இதுவரை கூற மறுத்திருப்பது அவரது மமதைக்கு சரியான எடுத்துக்காட்டு. விடுதலை போராட்டம், அதில் ஈடுபட்டு எண்ணற்ற தியாகம் செய்தவர்களை ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் மதித்ததில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.