சென்னை: மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர். தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கரூர், வேலூர் ஆட்சியர்கள் விசாரனைக்கு இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவுள்ளனர். மணல் குவாரி ஒபந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.
மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர்
previous post