சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரும் மனு ஜன.19ல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.