சேலம்: ஓமலூர் அருகே தொளசம்பட்டியில் பாட்டியை கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தனது நண்பர் மணியுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வன் பாட்டியை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது தந்தை தற்கொலைக்கு பாட்டி தங்கம்மாள் காரணம் என்று கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.