சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரும் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.