Sunday, June 16, 2024
Home » சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை மங்களம் அருவியில் குளித்த இருவர் உயிரிழப்பு..!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை மங்களம் அருவியில் குளித்த இருவர் உயிரிழப்பு..!!

by Lavanya

சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை உள்ள மங்களம் அருவியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உதகை அருகே உள்ள சிங் போஸ்ட் பகுதியை சேர்ந்த நிஷாந்த், ஜஸ்வந்த் மற்றும் தமீம் ஆகியோர் திருச்சி மாவட்டம் முசுரி அருகே உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அருவியில் குளிக்கவந்த மூவரும் பாறை மீது எறியுள்ளனர். அப்போது பாறையில் இருந்து வழுக்கி அருவி நீரில் மூவரும் விழுந்தனர்.

இதில் பலத்த காயமுற்ற ஜஸ்வந்த் மற்றும் தமீம் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். உடன் சென்ற ஆர்த்தி அருகில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து படுகாயமடைந்த நிஷாந்த்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு நிஷாந்த் அனுப்பப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸ் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.

You may also like

Leave a Comment

ten − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi