Friday, May 17, 2024
Home » சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

by Karthik Yash

சென்னை: இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் இறந்த சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, நண்பர் கோபிநாத்துடன் கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் இறந்தார். மேலும் கோபிநாத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி 8 நாளாக நடந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் ஒரு பாறையில் சிக்கியிருந்த அவரது உடலை ஸ்கூபா டைவர்கள் கண்டெடுத்து மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. அங்கிருந்து வெற்றி துரைசாமியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர். நேற்று அவரது உடல் தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு நந்தனம் சிஐடியு நகர் கொண்டுவரப்பட்டது.

அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக துணை பொதுச் செயாளர் சுதீஷ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்மாநில செயலாளர் முத்தரசன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அஜித்குமார், மனைவி சாலினி, டைரக்டர் அமீர், தாமு உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் திநகர், கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi