மாஸ்கோ: வாக்னர் படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மோதலை தூண்டும் வகையில் வாக்னர் படை செயல்பட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் குற்றச்சாட்டை அடுத்து வாக்னர் படை வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் கூலிப்படை சண்டையிட்டு வந்தது.