கீழக்கரை: இலங்கைக்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் திருப்புல்லாணி அருகே நேற்று முன்தினம் இரவு பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில், பதிவு எண் இல்லாத நாட்டுப்படகில் பெரிய பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் அதே பகுதியை சேர்ந்த முஹமது மீராஸா (42) எனவும், ரூ.2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல ஏற்றியது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.