சென்னை: சென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ஏ.ஆர்.டி. நகைக்கடை குடோனில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் பர்னிச்சருக்கு சொந்தமான குடோன் உள்ளது. மோசடி புகாரில் ஏ.ஆர்.டி. உரிமையாளர்கள் தலைமறைவான நிலையில் குடோனில் இருந்து கொள்ளை முயற்சி ஏற்பட்டுள்ளது.