சென்னை: சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் டி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்ட நர்மதா மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிலம் கையகப்படுத்துதலில் முறைகேடு செய்ததாக டி.ஆர்.ஓ. நர்மதா மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நர்மதா நேற்று ஆந்திராவில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நர்மதாவை செப்.8 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.