ராயக்கோட்டை : ராயக்கோட்டையில், உரிய விலை கிடைக்காததால 4 டன் மாம்பழங்களை கூடை கூடையாக ஏாியில் கொட்டி விட்டுச் சென்றனர்.
ராயக்கோட்டை பகுதியில் தக்காளிக்கு அடுத்தப்படியாக மா சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், மாம்பழங்களை ஜூஸ் பேக்டரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், அவர்களும் குறைந்த விலைக்கு தான் வாங்குகின்றனர். இந்நிலையில், மிகுந்த ருசி கொண்ட காதர் என்னும் மாம்பழங்களை மைசூருவிலிருந்து 4 டன் வாங்கி வந்துள்ளனர்.
ஆனால், அந்த பழத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்க வில்லை. அடிமாட்டு விலைக்கு சில்லரை வியாபாாிகள் கேட்டதால், மாங்கூழ் பேக்டரிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கும் விலை குறைவாக கேட்டுள்ளனர்.
ஆனால், வாங்கி வந்து 2 நாட்களாகி விட்டதாலும், லாாியிலேயே இருந்ததாலும் வெப்ப தாக்குதலால் மாம்பழம் தரம் குறைந்தது. இதையடுத்து, ₹2 லட்சம் மதிப்பிலான மாம்பழத்தை ராயக்கோட்டை அருகே உள்ள ஒடையாண்டஅள்ளி ஏரியில் கொட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ₹2 லட்சத்திற்கு வாங்கி வந்த பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், மீன்களுக்கு உணவாகும் என்ற நம்பிக்கையில் ஏரியில் கொட்டி விட்டுச் சென்றோம் என்றனர்.