தேனி: கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்துள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகருக்குள் 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் பால்பாண்டி அறிவித்துள்ளார். அரிசி கொம்பன் யானை கம்பம் நகர் பகுதியில் நடமாடும் நிலையில் மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பேரை பலி கொண்ட அரிசி கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.