Wednesday, May 15, 2024
Home » வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

by Ranjith

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார். திருவள்ளூர் நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ஜான், ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா, விஜயகுமார், கமலி, ஆனந்தி சந்திரசேகர், செந்தில்குமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன், நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகர் நல அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சரர் மு.க.ஸ்டாலினுக்கும், வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் உள்பட கடைகள் ஏலம், வரவு, செலவு மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும்போது, மிக்ஜாம் புயலால் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சேதமடைந்த சாலைகள், பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளின் எல்லைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi