Tuesday, May 7, 2024
Home » குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!

by Porselvi

டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் கோகல் சந்த் – கேசரி தேவி தம்பதிக்கு 1951ம் ஆண்டு மே 18ம் தேதி மகனாகப் பிறந்தார் ஜக்தீப் தன்கர். 2003ம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவியேற்றார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நாட்டின் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தன்கர்.

இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,”குடியரசு துணைத் தலைவர் ஸ்ரீ ஜகதீப் தன்கர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சட்டங்கள் தொடர்பான வளமான அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். நமது பாராளுமன்றத்தை மேலும் பலனளிக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , “மாண்புமிகு திரு ஜகதீப் தங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்துடன் நமது நாட்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன்,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi