சென்னை: மக்களின் வாக்குகளுடன் மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக சக்திகள் வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார். சென்னை, நந்தனத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று வாக்கு செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர்களுக்கு ஜனநாயக உரிமையை கொடுக்கும் ஒரு முக்கியமான தேர்தல் இது. ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல் இது. இதில் மக்களின் வாக்குகளைப் பெற்று மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக சக்திகள் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.