![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/51-l-2.jpg?type=webp&quality=80)
சென்னை: சட்டப் பேரவையில் நேற்று பாபநாசம் ஜவாஹிருல்லா(மமக) பேசியதாவது: சிறைகளில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்களில் விடுதலை செய்யும் போது, தலைவர்கள் பிறந்த நாளில் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் வாழ்நாள் தண்டனை பெற்றுள்ள 37 முஸ்லிம் சிறைவாசிகளை இன்னும் விடுவிக்காமல் வைத்துள்ளனர். கீழ் வெண்மணி சம்பவத்தில் தண்டனை பெற்றவர்கள், தர்மபுரி பஸ்எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது போல் இவர்களுக்கும் வாய்ப்பு வழங்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. அமைச்சர் ரகுபதி: 115வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலை செய்யப்பட்டவர்களில் 8 பேர் முஸ்லிம்கள். 6 பேருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 9 பேருக்கு மட்டும் ஆணையம் பரிந்துரை செய்யவில்லை. அவர்கள் குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும்.