சென்னை: ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் நிறமாறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஒ.பி.எஸ் விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறார். அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை அறிக்கையை நீத்மன்றத்துக்கு பதில் அரசிடம் அளித்துள்ளது. சபாநாயகர் நீதிபதி போல் செயல்பட்டிருப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்தார்.