செங்கோட்டை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் கேரள-தமிழக எல்லையான மேக்கரை, அச்சன்கோவில் கொடவாசல் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் செங்கோட்டை-அச்சன்கோவில் சாலையில் நேற்று காலை செங்கோட்டை வழித்தடத்தில் அச்சன்கோவில் கே.எஸ்.ஆர்.டி.சி சேவை நிறுத்தப்பட்டது. மேக்கரை பகுதியில் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது போல் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.